Saturday, February 11, 2023

Well of hell (barhut well) tamil

மர்மங்கள் விலகிய மர்ம கிணறு

Well of Hell mysteries removed

barhut well (Well of Hell)

ஏமன் நாட்டில் ஓமன் எல்லையில் அல் மஹ்ரா பாலைவனப்பகுதியில் உள்ள பார்ஹட்டின் கிணறு (Barhut) இது நரகத்தின் கிணறு (Well of Hell) என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கையாகவே உருவான இக் கிணறு பல்வேறு மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. மர்ம கிணறு 100 அடி அகலமும் 367 அடி ஆழமும் கொண்டது.


இந்த மர்ம கிணறு பற்றி பல்வேறு யூகங்கள் நிலவி வந்தன. 

அந்தபகுதியை சேர்ந்தவர்கள் கிணற்றுக்கு அருகில் வரும் எதுவும் தப்பிக்கமுடியாமல் உள் இழுக்கப்படும் என்று நீண்ட காலமாக நம்புகிறார்கள். பல நூற்றாண்டுகளாக ஏமன் மக்கள் இந்த கிணறு ஆவிகளின் சிறை என்றும் நம்பினர். அதற்கு காரணம் அதன் உள்ளே இருந்து வரும் துர்நாற்றம் தான்.

சமீபத்தில் ஏமன் அதிகாரிகள் அங்கு என்ன இருக்கிறது என்று தெரியாது என்று ஒப்புக்கொண்டனர். துரதிர்ஷ்டத்திற்கு பயந்து, அருகிலுள்ள பல குடியிருப்பாளர்கள் துளையைப் பற்றி பேச விரும்புவதில்லை.

மர்மமான இந்த பார்ஹட்டின் கிணறின் அடிப்பகுதி சென்ற ஆய்வாளர்கள்

பல நூற்றாண்டுகளாக மர்மத்தால் மூடப்பட்டிருந்த பூமியில் ஒரு இடைவெளி துளை இறுதியாக ஆராயப்பட்டது. 

ஆய்வாளர்களைத் தடுத்து நிறுத்திய திகிலூட்டும் கதைகள் இருந்தபோதிலும், ஓமானி குகைகள், ஓமன் குகை ஆய்வு குழு (OCET) என்ற குழு, "ஹெல் பிட்" கிணறை ஆராய முடிவு செய்தது.10 பேர் கொண்ட குழுவுடன் சென்று உபகரணங்களின் உதவியுடன் குழியின் அடிப்பகுதிக்கு சென்றனர்.

இதன் மூலம் பல நூற்றாண்டுகளாக திகிலூட்டும் புராணக்கதைகளுக்கும் , தலைமுறைகள் முழுவதும் பயத்தைத் தூண்டிக் கொண்டிருந்த மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன.

அவர்கள் சுமார் ஆறு மணி நேரம் குகையில் கழித்தனர். 

அவர்கள் கண்ட காட்சிகள் நம்பமுடியாத அழகான மற்றும் பிரம்மிபூட்டக்கூடியதாக இருந்தன என கூறினர்.

கிணற்றுக்குள் ஒரு நீர்வீழ்ச்சி மழை பொழிவதை போன்று இருந்தது.. குகை வண்ணமயமான அற்புதமான பாறைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த குழு குகை முத்துக்கள் என்று அழைக்கப்படும் விசித்திரமான அழகான பிரகாசமான பச்சை முத்துக்களையும் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்தது.

"குகை முத்துக்கள் அடர்த்தியான கால்சியம் கார்பனேட் படிவுகள் ஆகும், அவை பல்லாயிரம் ஆண்டுகளாக விழும் நீரின் இயக்கத்தால் உருவாகின்றன.

"அங்கு முன்பு மனிதர்கள் இறங்கி பணிகள் எதுவும் செய்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. எனவே யாராவது உண்மையில் அங்கு இறங்கினார்களா என்பது தெளிவாக இல்லை, இருப்பினும் 100% உறுதியாக இருப்பது கடினம்." 

மேலும் கிணற்றில் பாம்புகள், இறந்து போன விலங்குகள் போன்றவை காணப்பட்டன என கூறினர்.

அவர்கள் நீர், பாறைகள் மற்றும் மண் ஆகியவற்றை சேகரித்து , எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்து அவற்றின் கண்டுபிடிப்புகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் திட்டத்துடன் எடுத்து வந்துள்ளனர்.

பல வருடங்கள் பல கதைகள் கூறப்பட்ட இந்த நரக கிணறின் மர்மம் ஆராய்ச்சியாளர்களால் முடித்து வைக்கப்பட்டது.



No comments:

Post a Comment

Thanks

Featured Post

How to Add Border and Shading to Paragraphs in Adobe InDesign – Easy Tutorial for Beginners

  In this beginner-friendly tutorial, I’ll show you how to add borders and shading to paragraphs in Adobe InDesign 2020 . Whether you're...

Popular

ads